అధ్యాయం 7: ஞான விஞ்ஞான யோகம்

தெய்வீக ஞானத்தை உணர்தல் மூலம் யோகம்

இந்த அத்தியாயம் கடவுளின் ஆற்றல்களின் பொருள் மற்றும் ஆன்மீக பரிமாணங்களை விவரிப்பதன் மூலம் தொடங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ணர், இவை அனைத்தும் அவரிடமிருந்து தோன்றியவை என்றும், நூலில் கட்டப்பட்ட மணிகள் போல அவரில் தங்கியிருப்பதாகவும் விளக்குகிறார். அவர் முழு படைப்பிற்கும் ஆதாரமாக இருக்கிறார், அது மீண்டும் அவருக்குள் கரைகிறது. அவரது பொருள் ஆற்றல், மாயையை, கடப்பது மிகவும் கடினம், ஆனால் அவரிடம் சரணடைபவர்கள் அவருடைய அருளைப் பெற்று அதை எளிதாகக் கடக்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் தன்னிடம் சரணடையாத நான்கு வகையான மக்களையும், அவருடைய பக்தியில் ஈடுபடும் நான்கு வகையான மக்களையும் விவரிக்கிறார். அவருடைய பக்தர்களில், அறிவாலும், மனத்தாலும், புத்தியாலும் அவரை வழிபடுபவர்கள் அவருக்கு மிகவும் பிரியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். பொருள் ஆசைகளால் புத்தி பறிக்கப்பட்ட சிலர், தேவலோகக் கடவுள்களிடம் சரணடைகின்றனர். ஆனால் இந்த தேவலோகக் கடவுள்களால் அவர்கள் ஒப்புயர்வற்ற கடவுளிடமிருந்து பெற்ற சக்திகளால் தற்காலிகமான ஜடப் பலன்களை மட்டுமே கொடுக்க முடியும். எனவே, பக்திக்கு மிகவும் தகுதியான பொருள் ஸ்வயம் கடவுளே ஆவார். ஶ்ரீ கிருஷ்ணர் தான் நித்திய தெய்வீக பண்புகளை உடைய மிக உயர்ந்த யதார்த்தம் மற்றும் இறுதி சாதனை, என்பதை உறுதிப்படுத்துகிறார். ஏனெனில் அவரது உண்மையான வடிவம் அவரது ஆழ்நிலை யோக3மாயா சக்தியின் திரையால் மூடப் பட்டிருப்பதால், எனவே அவரது அழியாத தெய்வீக தன்மையை அனைவராலும் அறிய முடியாது. நாம் அவரிடம் அடைக்கலம் புகுந்தால், அவரை அறியும் பொருட்டுஅவரது தெய்வீக அறிவை அவர் நமக்கு வழங்குகிறார், நாமும் சுயத்தைப் பற்றிய அறிவையும் கர்ம செயல்களின் துறையில் ஞானத்தையும் அறிவையும-அடைகிறோம்.

భగవద్గీత 7.1 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

மனதை என்னிடமே பிரத்தியேகமாக லயித்து பக்தி யோகத்தால் என்னிடம் சரண் அடைவதன் மூலம் சந்தேகமின்றி, என்னை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

భగవద్గీత 7.2 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

இந்த அறிவையும் ஞானத்தையும் நான் இப்போது உனக்குமுழுமையாக வெளிப்படுத்துகிறேன், இந்த அறிவை உணர்ந்தால்,மேலும் வேறு எந்த எந்த அறிவும் அறியப்பட வேண்டிய அவசியம் இருக்காது

భగవద్గీత 7.3 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

மனிதப் பிறப்பைப் பெற்றவர்களில் ஒரு சிலர் மட்டுமே முழுமை பெற முயல்கிறார்கள். ஆயிரக்கணக்கான பரிபூரண ஆன்மாக்களில் கூட, என்னுடைய பிரதானமான நிலையையும், தெய்வீக மகிமையையும் அறிந்தவர்கள் மிகவும் அரிதானவர்கள்.

భగవద్గీత 7.4 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பூமி, நீர், நெருப்பு, காற்று, விண்வெளி, மனம், புத்தி மற்றும் அகங்காரம் - இவை எனது பொருள் ஆற்றலின் எட்டு கூறுகள்.

భగవద్గీత 7.5 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

என்னுடைய தாழ்ந்த ஆற்றல் அப்படி. ஆனால் அதற்கு அப்பால், ஓ வலிமையான கைகளை கொண்ட அர்ஜுனா, எனக்கு ஒரு உயர்ந்த ஆற்றல் உள்ளது. இதுவே இந்த உலகில் வாழ்வின் அடிப்படையாக உள்ள உடலமைந்த ஆத்மாக்களை உள்ளடக்கிய ஜீவ சக்தி (ஆத்ம ஆற்றல்) .

భగవద్గీత 7.6 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எல்லா உயிர்களும் என்னுடைய இந்த இரண்டு ஆற்றல்களால் வெளிப்படுகின்றன என்பதை அறிந்து கொள். நான் முழு படைப்பின் ஆதாரம், அது மீண்டும் என்னுள் கரைகிறது.

భగవద్గీత 7.7 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அர்ஜுனன், என்னை விட உயர்ந்தது எதுவுமில்லை. ஒரு நூலில் கட்டப்பட்ட மணிகளைப் போல எல்லாம் என்னில் தங்கியுள்ளது.

భగవద్గీత 7.8 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

குந்தியின் மகனே, நான் தண்ணீரில் சுவையாகவும், சூரியன் மற்றும் சந்திரனின் பிரகாசமாகவும் இருக்கிறேன். நான் வேத மந்திரங்களில் உள்ள ‘ஓம்’ என்ற புனித எழுத்து; நான்முகில் மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூய வான வெளியின் ஒலியாகவும், மனிதர்களில் திறமையாகவும் இருக்கிறேன்.

భగవద్గీత 7.9 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நான் பூமியின் தூய நறுமணம் மற்றும் நெருப்பில் பிரகாசம். நான் எல்லா உயிர்களிலும் உயிர் சக்தியாகவும், துறவிகளின் தவமாகவும் இருக்கிறேன்.

భగవద్గీత 7.10 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அர்ஜுனா, நான் எல்லா உயிர்களுக்கும் நித்திய விதை என்பதை அறிந்துகொள். நான் புத்திசாலிகளின் புத்தியாகவும், மகிமையுள்ளவர்களின் மகிமையாகவும் இருக்கிறேன்.

భగవద్గీత 7.11 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பரத வம்சத்தில் தோன்றியவர்களில் சிறந்தவனே, வலிமையான மனிதர்களில் நான் அவர்களின் , ஆசை மற்றும் பேரார்வம் அற்ற பலம். நான் நல்லொழுக்கம் அல்லது வேதப்பூர்வ உத்தரவுகளுடன் முரண்படாத பாலியல் செயல்பாடு.

భగవద్గీత 7.12 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பொருள் இருப்பின் மூன்று நிலைகள்-நன்மை, ஆர்வம் மற்றும் அறியாமை-என் ஆற்றலால் வெளிப்படுகிறது. அவை என்னில் அடங்கியுள்ளன, ஆனால் நான் அவற்றிற்கு அவற்றுக்கு அப்பாற்பட்டவன்.

భగవద్గీత 7.13 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

மாயாவின் மூன்று முறைகளால் ஏமாற்றப்பட்டு, இந்த உலகில் உள்ள மக்களால் அழியாத மற்றும் நித்தியமான என்னை அறிய முடியாது.

భగవద్గీత 7.14 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எனது தெய்வீக ஆற்றல், மாயா, இயற்கையின் மூன்று முறைகளைக் கொண்டுள்ளது, அதை வெல்வது மிகவும் கடினம். ஆனால் என்னிடம் சரணடைந்தவர்கள் அதை எளிதில் கடந்து விடுகிறார்கள்.

భగవద్గీత 7.15 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நால்வகை மனிதர்கள் என்னிடம் சரணடைவதில்லை-அறிவை அறியாதவர்கள், என்னை அறியும் திறன் கொண்டவர்களாயினும் சோம்பேறித்தனமாகத் தங்கள் கீழ்நிலையைப் பின்பற்றுபவர்கள், , மயக்கமடைந்த புத்திசாலிகள், அசுர குணம் கொண்டவர்கள்.

భగవద్గీత 7.16 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பரத வம்சத்தில் தோன்றியவர்களில் சிறந்தவனே, துன்பத்தில் உள்ளவர்கள், அறிவைத் தேடுபவர்கள், உலக உடைமைகளைத் தேடுபவர்கள், அறிவில் நிலைபெற்றவர்கள் என நான்கு வகையான பக்திமான்கள் என் பக்தியில் ஈடுபடுகிறார்கள்

భగవద్గీత 7.17 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

இவர்களுள், என்னை அறிவால் வழிபடுபவர்களையும், உறுதியுடனும், என்னில் மட்டுமே ஈடுபாடு கொண்டவர்களையும், உயர்ந்தவர்களாக நான் கருதுகிறேன். நான் அவர்களுக்கு மிகவும் பிரியமானவன், அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.

భగవద్గీత 7.18 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

என் மீது பக்தி கொண்டவர்கள் அனைவரும் உண்மையில் உன்னதமானவர்கள். ஆனால், உறுதியான மனம் கொண்டவர்களும், புத்தி என்னில் இணைந்திருப்பவர்களும், என்னை மட்டுமே தங்கள் உயர்ந்த குறிக்கோளாகக் கொண்டவர்களை நான் என் சுயமாக கருதுகிறேன்.

భగవద్గీత 7.19 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஆன்மிகப் பயிற்சியின் பல பிறவிகளுக்குப் பிறகு, ஞானம் பெற்ற ஒருவன், நான் தான் அனைத்து என்று அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய பெரிய ஆன்மா உண்மையில் மிகவும் அரிதானது.

భగవద్గీత 7.20 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பொருள் ஆசைகளால் அறிவு பறிக்கப்பட்டவர்கள் தேவலோக் கடவுள்களிடம் சரணடைகிறார்கள். அவர்களின் சொந்த இயல்பைப் பின்பற்றி, அவர்கள் தேவலோக தேவர்களை வணங்குகிறார்கள், இந்த தேவலோக ஆளுமைகளை சாந்தப்படுத்துவதற்கான சடங்குகளைப் பின்பற்றுகிறார்கள்

భగవద్గీత 7.21 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஒரு பக்தன் எந்த தேவலோக வடிவத்தை நம்பிக்கையுடன் வழிபட முற்படுகிறானோ, அத்தகைய பக்தனின் நம்பிக்கையை நான் அந்த வடிவத்தில் நிலைநிறுத்துகிறேன்.

భగవద్గీత 7.22 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நம்பிக்கையுடன், ஒரு குறிப்பிட்ட தேவலோக தெய்வத்தை வணங்கி, ஆசைப் பொருட்களைப் பக்தர் பெறுகிறார். ஆனால் உண்மையில், நான் மட்டுமே இந்த நன்மைகளை ஏற்பாடு செய்கிறேன்.

భగవద్గీత 7.23 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அறியாமை உடைய இம்மக்களுக்கு கிடைத்த பலன் அழியக்கூடியது.., என் பக்தர்கள் என்னிடம் வரும்போது, ​​ தேவலோக தெய்வங்களை வழிபடுபவர்கள் விண்ணுலக வாசஸ்தலங்களுக்குச் செல்கிறார்கள்.

భగవద్గీత 7.24 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

புத்திசாலித்தனம் குறைந்தவர்கள், ஒப்புயர்வற்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணராகிய நான் முன்பு உருவமில்லாமல் இருந்ததாகவும், இப்போது இந்த ஆளுமையைப் பெற்றிருப்பதாகவும் நினைக்கிறார்கள். என்னுடைய தனிப்பட்ட வடிவத்தின் அழியாத உயர்ந்த தன்மையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

భగవద్గీత 7.25 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எனது தெய்வீக யோகமாயா ஆற்றலால் மறைக்கப்பட்ட நான் அனைவருக்கும் வெளிப்படுவதில்லை. எனவே, அறிவு இல்லாதவர்கள் நான் பிறப்பில்லாதவன், மாறாதவன் என்பதை அறிவதில்லை.

భగవద్గీత 7.26 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஓ அர்ஜுனா, எனக்கு கடந்த காலம், நிகழ்காலம். மற்றும் எதிர்காலம் தெரியும், மேலும் அனைத்து உயிரினங்களையும் நான் அறிவேன், ஆனால் என்னை யாரும் அறியார்.

భగవద్గీత 7.27 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பரத வம்சத்தில் வழித்தோன்றலே, ஆசை மற்றும் வெறுப்பு என்ற இருமைகள் மாயையிலிருந்து எழுகின்றன. எதிரிகளை வென்றவரே, ஜடப்பொருளில் உள்ள அனைத்து உயிரினங்களும் பிறப்பிலிருந்தே இவற்றால் ஏமாற்றப்படுகின்றன.

భగవద్గీత 7.28 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஆனால் புண்ணிய செயல்களில் ஈடுபட்டு பாவங்கள் அழிக்கப்பட்ட நபர்கள், இருமைகளின் மாயையிலிருந்து விடுபடுகிறார்கள். அத்தகைய நபர்கள் என்னை உறுதியுடன் வணங்குகிறார்கள்.

భగవద్గీత 7.29 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

என்னிடத்தில் அடைக்கலம் புகுந்தவர்கள், முதுமை மற்றும் இறப்பிலிருந்து விடுதலை பெற முயற்சிப்பவர்கள், ப்ரஹ்மத்தையும், தனிப்பட்ட சுயத்தையும், முழு கர்ம வினையையும் அறிந்து கொள்கிறார்கள்.

భగవద్గీత 7.30 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அதி4பூ4தம், (பொருளின் களம்) மற்றும் அதி4தெ3ய்வம் (தேவலோக கடவுள்கள்) மற்றும் அதி4யஜ்ஞம் (அனைத்து யாகங்களின் இறைவன்) ஆகியவற்றின் ஆட்சிக் கொள்கையாக என்னை அறிந்தவர்கள், அத்தகைய ஞானம் பெற்ற ஆத்மாக்கள் மரணத்தின் போதும் என்னைப் பற்றிய முழு உணர்வுடன் இருக்கிறார்கள்.
Swami Mukundananda
7. ஞான விஞ்ஞான யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency